Sunday, October 28, 2018

மிக சுவாரசியமான வீடியோக்கள் - 3


மிக சுவாரசியமான வீடியோக்கள் - 2


மிக சுவாரசியமான வீடியோக்கள் - 1


மிக சுவாரசியமான கணக்கு-4


ஒருவரிடம் 10 பைகள் உள்ளன. முதல் பையில் 100 கிராம் எடையுள்ள ஒரே ஒரு கோலி குண்டு உள்ளது. இரண்டாவது பையில் 100 கிராம் எடையுள்ள இரண்டு கோலி குண்டுகள் உள்ளன.இப்படியே 10வது பையில் 100 எடை கொண்ட 10 கோலிக்ள் உள்ளன.
கணக்கு என்னவென்றால் ஏதோ ஒரு பையில் உள்ள கோலி குண்டுகள் எல்லாம் 100 கிராமிற்கு பதில் 90 கிராம் கொண்டவைகளாக உள்ளன.
இதை ஒரே நிலுவையில்..நன்றாக கவனிக்கவும் …ஒரு தரம் தான் …ஒரே நிலுவையில் எந்த பையில் உள்ள கோலிகள் கனம் குறைந்தவை என்று கண்டுபிடிக்கவேண்டும்.
இதற்கு ஒரு க்ளூ என்னவென்றால் கீழ்கண்ட சூத்திரத்தை உபயோகித்துக்கொண்டு கண்டறியவேண்டும் :
n (n+1)
   2

மிக சுவாரசியமான கணக்கு - 3

மேசையின் உயரம் என்ன?

மேலே உள்ள கணக்கு பெரியவர்களுக்கு சிறிது எளிதே. ஆனால் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இது அல்ஜீப்ரா வில் உள்ள ஓர் பகுதியை  மிக எளிதாக அறிய இது உதவும் எனக் கருதியதால் இங்கு இடுகிறேன்.

விடை:
பூனை + மேஜை – ஆமை = 170
ஆமை + மேஜை – பூனை = 130

இரண்டு மேஜைகளின் உயரம் = 300 எனில் ஒரு மேஜையின் உயரம் = 150

மிக சுவாரசியமான கணக்கு - 2

திரு.வெ.இறையன்பு அவர்கள் குமுதம் இதழில் கொடுத்த ஐ.ஏ.எஸ் தேர்வில் கேட்கப்பட்ட கணக்குப் புதிராம்:

ஒருவர் ஒரு கடையில் இரு நூறு ரூபாய் பொருட்கள் வாங்குகிறார்.அதற்கு இரண்டாயிரம் ரூபாயை நீட்டுகிறார். கடைக்காரர் தன்னிடம் சில்லறை இல்லாத்தால் பக்கத்து கடையில் வாங்கி, பாக்கி ஆயிரத்து எண்ணூறு ரூபாயை வாங்க வந்தவரிடம் கொடுத்தார். பிறகு பக்கத்து கடைக்காரர் தன்னிடம் வந்த ஈராயிரம் ரூபாய் செல்லாத ரூபாய் தாள் என அறிந்து சொல்ல, கடைக்காரர் அவருக்கு இரண்டாயிரம் ரூபாயை தன்னிடம் பொருட்கள் வாங்கியவனை திட்டிக்கொண்டே தருகிறார்.
இப்போது கடைக்காரருக்கு ஏற்பட்ட நட்டம் எவ்வளவு? 
A. RS 2200/-
B. RS 1000/-
C. RS 1800/-
D. RS 800/-
E. RS 2000/-
F. மேலுள்ளது எதுவும் இல்லை
******
நான் பள்ளி நாட்களில் ரசாயன பாடத்தில் ஆர்வமில்லாமலும் பயமும் கொண்டிருந்தேன்.ஆனால் கல்லூரியில் எனது ரசாயன பாடபேராசிரியர் இதை எப்படியோ அறிந்து நான் கணக்கில் மிக்க ஆர்முள்ளவன் எனவும் அறிந்து, கணக்கு தான் எல்லாவற்றிகும் அடிப்படை.கணக்கு நன்கு போடுபவன் ரசாயனமும் நன்கு உனக்கு வரும் என தெம்பூட்டி அதிலும் நலலறிவு பெற வகை செய்தார்.
சுயபுராணம் எதற்கென்றால், மேற்கண்ட கணக்கில் ஒரு அறிவியல் தத்துவம் ஒளிந்துள்ளது. எல்லோருக்கும் தெரிந்ததே..அதையும் சொல்லுங்களேன்.
************
விடை: ஒரு குடுவையில் தண்ணீரை ஊற்றி அதில் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள எடைக்கல்லை போட்டால் அந்த எடையுள்ள அளவிற்கு தண்ணீர் வெளியேறும்... எவ்வளவுதான் சுற்றி சுற்றி வந்தாலும் செல்லாத ரூபாயின் மதிப்பு என்னவோ அதுதான் நட்ட மதிப்பு. அதாவது ரூ2000.